ஆதார் - பான் இணைக்க வரும் 30ம் தேதி கடைசி

புதுடெல்லி: ஆதாரையும் பான் எண்ணையம் இணைக்க கெடு, வரும் 30ம் தேதியுடன் முடிகிறது. நிதி மசோதா திருத்தங்களின்படி, பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. கடைசியாக, நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி பான் - ஆதார் இணைப்பு அவகாசம் செப்டம்பர் 30 வரை வழங்கப்பட்டது. இதற்கு மேல் அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. கெடு முடிய சில நாட்களே உள்ளன. ஆதாருடன் இணைக்காவிட்டால் பான் எண்ணை பயன்படுத்த முடியாது. எனவே, அக்டோபர் 1 முதல் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ள இயலாமல் போகலாம். ஆனால், இதுகுறித்த அறிவிப்பு அல்லது வரையறை எதுவும் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை. இணைப்பது எப்படி?: வருமான வரி இணையதளத்தில் இடதுபுறம். 'Quick Links' என்பதை கிளிக் செய்து, 'Link Aadhaar' என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதில் பான் எண், ஆதார் எண், பெயர் ஆகியவற்றை உள்ளீடு செய்த பிறகு ஒரு முறை பாஸ்வேர்டு மொபைல் எண்ணுக்கு வரும். அதை உள்ளீடு செய்து பான் - ஆதார் இணைக்கலாம். இதையடுத்து, உங்கள் பான், ஆதார் எண்களில் உள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம் ஆகியவற்றை சரிபார்த்து உறுதி செய்யும். ஒரு வேளை, பான் மற்றும் ஆதார் எண்களில் உள்ள பெயர் வேறுபட்டிருந்தால் இணைக்க முடியாது. பான் அல்லது ஆதார் எண்ணில் பெயரை ஒரே மாதிரியாக திருத்திய பிறகு இணைத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு விரைவில் வருமான வரியினரிடம் இருந்து அழைப்பு வரலாம்..! ஆணையர் எச்சரிக்கை..!




வருமான வரி செலுத்தாமல் இருப்பது மற்றும் கணக்கில் காட்டாத வருமானம் போன்றவைகளால் இனி எந்த லாபமும் இருக்கப் போவதில்லை என வருமான வரித் துறையினர் சொல்கிறார்கள். காரணம் வருமான வரித்துறையினர், அனைத்து குடிமக்களின் விவரங்கள் அடங்கிய ஒரு பெரிய டேட்டா பேஸையே அமைத்து தரவுகளை திரட்டி வருகிறார்களாம்.


"கூடிய விரைவில், முறையாக வரி செலுத்தாதவர்கள், தங்களின் ஒவ்வொரு முதலீட்டையும், வருமான வரித் துறையினரிடம் சமர்பிக்காத விவரங்களைப் பற்றியும் விளக்கிச் சொல்ல அவர்கள் அழைக்கப்படுவார்கள்" என்று உத்தரபிரதேசம் (மேற்கு) மற்றும் உத்தரகண்ட் பிராந்தியத்தின் வருமான வரித் துறையின் முதன்மை தலைமை ஆணையர் பி.கே.குப்தா சொல்லி இருக்கிறார்.


Income Tax Notice: you may get a call from IT dept
வருமான வரித் துறையினரின் வருமான வரிச் சட்டம் 1961 இன் கீழ் டி.டி.எஸ் மற்றும் டி.சி.எஸ் விதிகள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தில், அவர் பேசிய போது தான் இந்த எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.


"நட்பு மற்றும் தொழில்முறை நெறிமுறைகளுக்கு இடையே மிக மெல்லிய வேறுபாடு இருப்பதை வரி வல்லுநர்கள் மற்றும் வரி செலுத்துபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஊழல் எனத் தெளிவாகக் உங்களுக்குத் தெரியும் எதையும் செய்ய வேண்டாம். அனைவருக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் எங்களோடு இணைந்து செயல்பட விரும்புகிறீர்கள் என்றால், எங்களோடு தொழில் சார் நெறிமுறைகள் உடன் பழக வேண்டும்"என்றார் குப்தா.


எந்த அப்பாவியும் தண்டிக்கப்படாமல் இருப்பதை வருமான வரி அதிகாரிகள் உறுதி செய்வார்கள். "ஆனால் குடிமக்கள் உண்மைகளை சிதைக்கவோ அல்லது தவறான ஆதாரங்களை உருவாக்கவோ கூடாது" என்று சொல்லி இருக்கிறார். நடப்பு நிதியாண்டில் உத்தர பிரதேசம் (மேற்கு) மற்றும் உத்தரகண்ட் ஆகிய பிராந்தியங்களுக்கான வரி வசூல் இலக்கு 35,979 கோடி ரூபாயாக நிர்ணயித்து இருக்கிறார்கள்.

ரூ. 1,500 to ரூ. 40,000..! வாகன பதிவுக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தத் திட்டம்..!

கடந்த ஆண்டு, 39 லட்சம் வரி செலுத்துவோரிடம் இருந்து, 28,855 கோடி ரூபாய் வரியை வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நம் வருமான வரி அதிகாரிகள், நிர்ணயித்த இலக்கை விட சுமார் 250 கோடி ரூபாய் கூடுதலாக வசூலித்தனர். ஆக முந்தைய ஆண்டை விட சுமார் 24 சதவிகிதம் கூடுதலாக இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

"இந்த ஆண்டு, உத்தரப் பிரதேசம் (மேற்கு) மற்றும் உத்தராகண்ட் பிராந்தியங்களில் மேலும் 6.6 லட்சம் வரி செலுத்துவோரை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லி இருக்கிறார் முதன்மை ஆணையர் குப்தா.

வருமானவரித்துறை TDS தொடர்பான 7 அதிரடி மாற்றங்கள்! செப். 1 முதல் அமலுக்கு வருகிறது


. அசையா சொத்துக்களை வாங்கும் போது, அதற்கான சொத்தின் மதிப்புக்கு மட்டுமே டி.டி.எஸ் செய்யப்படும் என்றவிதிமுறையில் இருந்து வந்தது. ஆனால்,வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒரு சொத்தை வாங்கும்போது, சொத்தின் மதிப்புடன், கிளப் ஹவுஸ்,கார் பார்க்கிங், மின்சாரம், நீர் வசதி கட்டணம், மற்றும் ஆடம்பர தேவைகளுக்கான வசதிகளுக்குசேர்த்து கட்டும்தொகையோடு அதற்கும்டி.டி.எஸ்-யை செலுத்த வேண்டும்.

2. ஓர் நிதியாண்டில் ஒருவங்கிக் கணக்கில் இருந்து ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்-க்கு மேல் பணத்தை எடுக்கும் பட்சத்தில், அதற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். ஆன்லைன் பணபரிவர்த்தனையை அதிகரிக்கவும், பணமில்லா பரிவர்த்தனையை குறைக்கவும்இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.செப்டம்பர் 1 முதல், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ .50 லட்சத்திற்கு மேல் பணம் செலுத்தும் தனிநபர்கள் மற்றும் HUF எனப்படும் இந்து கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் 5% டி.டி.எஸ் செலுத்த வேண்டும்.

வீடு புதுப்பித்தல், திருமண விழாக்களின் போது ஒரு குறிப்பிட்ட துறையை சேர்ந்த நபருக்கோ நிறுவனத்திற்கோ, 50 லட்சத்திற்கு மேல் பணம் செலுத்த நேர்ந்தால் அதில்,டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்பட வேண்டும்.

4.நீங்கள் பெற்ற ஆயுள் காப்பீட்டின் முதிர்வு தொகைக்குவரி விதிக்கப்படுமானால், நிகர வருமானப் பகுதியில் இருந்து 5%டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்படும்.

5. செப்டம்பர் 1 முதல், வங்கிகள் மற்றும் எஃப்ஐக்கள் சிறிய பரிவர்த்தனைகளை கூட வரித் துறைக்கு தெரிவிக்கும்படி கேட்கலாம், இதன் மூலம் உங்கள் வருமானவரிதாக்கலை சரிபார்க்க இதனை பயன்படுத்தலாம்.

6. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி,குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ஆதார் உடன் பான் இணைக்கப்படாவிட்டால் அந்த பான் எண் செயல்பாடற்றதாக கருதப்படும். எனினும் அது முடக்கப்பட்டதாக கருத முடியாது. இவ்வகை பான் என் உடையவர்கள் அதை மீண்டும் புதுப்பிக்க என்ன வழி என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

7.பரிவர்த்தனைகளுக்கு ஏற்ப பான் அல்லது ஆதாரை பயன்படுத்தலாம்.குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டுக்கு பதிலாக ஆதார் கார்டை மேற்கோள் காட்ட முடியும்.

How a Tournament Works, Part 3 - Direct Eliminations - SWORDS FENCING STUDIO ...