Posts

Showing posts from April, 2025

உங்கள் வருமான வரி தாக்கல் ஆனது புதிய தொழில்நுட்பத்தின் ( AI) படி கண்காணிக்கப்படும்

Image
இந்த வருமான வரித்துறை இப்போது அதிநவீனமான Artificial Intelligence (AI) மாடல் மூலம் உங்கள் வருமான வரி ITR ரிட்டர்னை முழுமையாக சோதனை செய்யத் தொடங்கியுள்ளது. இதுவரை மனித அதிகாரிகள் மட்டுமே ரிட்டர்னை சோதனை செய்திருந்தார்கள். ஆனால் கடந்த வருடம் முதல் AI மூலம் இந்த சோதனை துவங்கப்பட்டது. அந்த நேரத்தில் ஒரு அடிப்படை AI மாடல் பயன்படுத்தப்பட்டது. இப்போதோ, அதன் மேம்பட்ட பதிப்பு – அதாவது, advanced AI model – தான் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த AI மாடல் ரிட்டர்னில் உள்ள தரவுகளை மிக நுணுக்கமாக ஸ்கேன் செய்யும். Form 26AS, AIS, Form 16, Bank statement போன்ற அனைத்தையும் cross-check செய்து, அவற்றில் உள்ள ஏதேனும் வித்யாசம், மிகைப்படுத்தப்பட்ட deduction claims, ஹெச்சான refunds request, multiple PAN usage, அல்லது income spikes போன்ற சந்தேகப்படுத்தக்கூடிய விவரங்களை உடனே கண்டுபிடிக்கிறது. இது மட்டும் இல்லாமல், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டு income pattern, expense behaviour, investment trends எல்லாவற்றையும் ஆய்வு செய்கிறது. இதன் மூலம் அதிக அளவில் தவறான தகவல்களை தாக்கல் செய்யும் practices தடையின்றி கண்...

அரசு ஊழியர்கள் தவறாக வருமான வரி தாக்கல் செய்தால் வழக்கு வரும்

Image
மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர் வருமான வரி கணக்கில் மோசடி செய்து, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.அந்தவகையில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து அரசு, தனியார் துறையை சேர்ந்த ஆயிரம் ஊழியர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை பாயப்போகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் ஜனார்த்தனன் விளக்கம் அளித்துள்ளார். வருமான வரியை பொறுத்தவரை கடந்த ஆண்டு வரை புதிய வருமான வரி முறைப்படி ஆண்டுக்கு 7.25 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு வரியாக ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டியது இல்லை.. அதேபோல் பழைய வருமான வரிமுறைப்படி ஆண்டுக்கு ஐந்து லட்சம் வரை சம்பளம் வாங்குவோர் வருமான வரி கட்ட தேவையில்லை..(இப்போது மாறிவிட்டது). இதில் பழைய முறைப்படி 10 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும்.அதேபோல் வரியும் குறைவாவே கட்ட வேண்டியதிருக்கும்.. இதில் பல்வேறு சேமிப்பு, காப்பீடு மற்றும் லோன் போன்றவற்றை கணக்கு காட்ட வேண்டும். இந்நிலையில் மத்திய, மாநில அரசு பொத...