2018-19 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு அபராதத்துடன் தாக்கல் செய்ய செப். 30 கடைசி
SEPTEMBER 24, 2020
கடந்த 2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்ய கால அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் கணக்கு தாக்கல் செய்ய வருமான வரி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
கடந்த 2018- 19-ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2019-ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கியது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது.
அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிகழாண்டில் மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதற்கிடையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக அபராதம் செலுத்தி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பா் வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
How a Tournament Works, Part 3 - Direct Eliminations - SWORDS FENCING STUDIO ...
-
1. INCOME TAX SOFTWARE VR 13 4-2-26 TAMILNADU GOVERNMENT STAFF USE 1 a. POLICE DEPARTMENT INCOME TAX SOFTWARE 11-02-2025 2 ONLINE INC...
-
Ifhrms web site login *Method to download CPS Accounts Statement through Initiator login:* Login to IFHRMS --> eServices --...
-
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் படி செலுத்தப்பட்ட தொகை காண கணக்குத் தாள் வெளியீடு 26.5.2023 CLICK TO LOGIN A...
