ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமான வரி செலுத்துவோருக்கு பெரும் நிம்மதி புதிய ஸ்லாப் பரிந்துரை


ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமான வரி செலுத்துவோருக்கு பெரும் நிவாரணமாக புதிய வருமான அடுக்குகளை நேரடி வரி தொடர்பான பணிக்குழு பரிந்துரைத்து உள்ளது.
பதிவு: ஆகஸ்ட் 29,  2019 12:10 PM
புதுடெல்லி

ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளவர்களுக்கு, வருமான வரி விகிதத்தை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைப்பது, வரி விதிப்பு அடுக்குகளை நான்கில் இருந்து 5ஆக உயர்த்துவது உள்ளிட்ட பரிந்துரைகளை,  நேரடி வரி விதிப்பு முறை தொடர்பான ஆய்வுக்குழு மத்திய அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதுள்ள வருமான வரிச் சட்டத்தை மறுஆய்வுக்கு உட்படுத்தி, நாட்டின் பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப, புதிய சட்டத்தை இயற்றுவது குறித்து பரிந்துரைப்பதற்காக, நேரடி வரி தொடர்பான பணிக்குழு கடந்த 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த ஆய்வுக்குழு, கடந்த வாரத்தில் மத்திய அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கையில், வருமான வரி விதிப்பு அடுக்குகளை நான்கிலிருந்து ஐந்தாக உயர்த்தவும், சில அடுக்குகளுக்கு வருமான வரி விகிதத்தை குறைக்குமாறும் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, வருமான வரி விதிக்கப்படுவதில்லை. இந்த முதல் அடுக்கில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது, 2.5 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, 5 சதவீத வருமான வரி விதிக்கப்படுகிறது.

இந்த இரண்டாவது அடுக்கை, 2.5 லட்ச ரூபாயில் இருந்து 10 லட்ச ரூபாய் வரை விரிவுபடுத்துமாறும், வருமான வரி விகிதத்தை 10 சதவீதமாக நிர்ணயிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அடுக்கிற்கு 10 சதவீத வரி விகிதம் நிர்ணயித்தாலும், 5 லட்ச ரூபாய் வரை, ஏற்கெனவே உள்ள வரிக் கழிவுகளை  முழுமையாக அளிக்குமாறும், இதன் மூலம் 5 லட்ச ரூபாய் வரை ஈட்டுபவர்களுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலையை ஏற்படுத்துமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

5 லட்ச ரூபாயிலிருந்து 10 லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு தற்போது 20 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில், அதை 10 சதவீதமாக மாற்றுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த அடுக்கின் உயர்பிரிவில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் ஆண்டுக்கு 37 ஆயிரத்து 500 ரூபாய் மிச்சமாகும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

10 லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு தற்போது 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதை மேலும் இரண்டு அடுக்குகளாக பிரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 10 லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டுபவர்கள் என மூன்றாவது அடுக்கை ஏற்படுத்தி, வரி விதிப்பை 20 சதவீதமாகக் குறைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாவது அடுக்கில் உயர்பிரிவில் இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய் வரை மிச்சமாகும். இதற்கடுத்தபடியாக, 20 லட்ச ரூபாய் முதல் 2 கோடி ரூபாய்க்குள் வருமானம் உள்ளவர்களை 4ஆவது அடுக்காக நிர்ணயித்து 30 சதவீத வரியும், 2 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களை 5ஆவது அடுக்காக நிர்ணயித்து 35 சதவீத வரியும் விதிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள முறையில் இவர்கள் அனைவரும் 30 சதவீத வரி செலுத்தும் நிலையில், 4 மற்றும் 5 என மேலும் இரண்டு அடுக்குகளாக பிரிக்கும்போது, 2 கோடி ரூபாய்க்குள் ஈட்டுபவர்களுக்கு ஆண்டுக்கு 8.5 லட்ச ரூபாய் மிச்சமாகும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இவை அனைத்தும் மேல் வரி விதிப்பை கணக்கில் எடுக்காமல் அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளாகும். தற்போது ஆண்டுக்கு 2.5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு மேல் வரிகளையும் சேர்க்கும்போது, 42.7 சதவீத வரி விதிக்கப்படுகிறது. எனவே, ஆய்வுக் குழுவின் பரிந்துரைகள் ஒருவேளை ஏற்கப்பட்டால், அப்போது மேல் வரிகள் விதிக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா என்பதைப் பொறுத்தே வரி விகிதத்தின் அளவை கணக்கிட முடியும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் இந்த பரிந்துரைகளை அரசு ஏற்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் வருவாயை விரிவுபடுத்துவதற்கான வழிகளை அரசு ஆராய்ந்து வரும் நிலையில், இந்த பரிந்துரைகளை அரசு ஏற்குமா என்பது சந்தேகமே என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால், வரி விதிப்பை சிறிய அளவில் குறைத்துக்கொண்டாலும், அந்த பணம் தனிநபரில் கையில் மீதமாகி, செலவிடப்படும்போது, பொருள்களுக்கான கிராக்கியை அதிகரிக்கும் என்றும், இது உற்பத்தியை அதிகரிக்கச் செய்து பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்றும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த பரிந்துரைகளை அமல்படுத்தும்போது, நேரடியாக 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி வருவாய் குறையும் என்றாலும், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்போது அது இந்த இழப்பு மறைமுகமாக எளிதில் சரிக்கட்டி விடும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வரி விகிதம் மிக அதிகமாக இருக்கும்போது, அரசுக்கான ஒட்டுமொத்த வரி வருவாயை குறைக்கும் என்பது, ரீகன் ஆட்சிக் காலத்தில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்த ஆர்ட் லாஃபர் என்ற அமெரிக்க பொருளாதார அறிஞரின் கருத்தாகும்.

வரி விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது, எவ்வளவு சம்பாதித்தாலும் அரசுக்கு வரி வடிவில் கட்ட வேண்டியிருக்கும் என்பதால், மேலும் மேலும் பொருளீட்ட வேண்டும் என்ற ஊக்கம் குறைந்துபோகும் என்று அவர் கூறுகிறார். மேலும் மேலும் சம்பாதிப்பது என்பதற்கு பதிலாக வருவாய் அளவோடு இருந்தாலும் தரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் தனிநபர்களின் கவனம் சென்றுவிடும் என்றும், இது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை பாதித்து, அரசின் வரி வருவாய் குறைவதற்கே வழிவகுக்கும் என்பது ஆர்ட் லாஃபரின் வாதமாகும். இந்த கருத்தையும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருமான வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

நேரடி வரி தொடர்பான பணிக்குழு தற்போதைய வருமான  வரி அடுக்கு

ரூ.2.5 லட்சம் வரை   வரி கிடையாது                     
ரூ.2.5 லட்சம் முதல் -  ரூ.5 லட்சம் வரை  வரிச்சலுகை   
ரூ.2.5 லட்சம் முதல் -  ரூ.10 லட்சம் வரை   10%   வரி             
ரூ.10. லட்சம் முதல்  - ரூ.20 லட்சம் வரை  20%  வரி
ரூ.20 லட்சம் முதல் - ரூ.2.கோடி வரை 30%   வரி           
ரூ.2 கோடிக்கு மேல் -    35 % வரி

தற்போதைய வருமான வரி அடுக்கு

ரூ.2.5 லட்சம் வரை  - வரி கிடையாது                     
ரூ.2.5 லட்சம் முதல் -  ரூ.5 லட்சம் வரை   5% வரி
ரூ.5 லட்சம் முதல் -  ரூ.10 லட்சம் வரை   20 %   + 12,500 வரி
ரூ.10. லட்சம்   மேல்   - 30 % + 1,12,500 வரி

இந்த ஏழு தவறுகலைச் செய்திருந்தால், உங்களுக்கும் வருமான வரி நோட்டீஸ் வரலாம்..!





மும்பை, இந்தியா: வரும் ஆகஸ்ட் 31, 2019-க்குள் வருமான வரி படிவங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை இப்போதே வருமான வரிப் படிவங்களை எல்லாம் தாக்கல் செய்துவிட்டீர்கள் என்றால் கூட, அவைகளை திருத்தம் செய்ய வரும் ஆகஸ்ட் 31, 2019 வரை நேரம் இருக்கிறது.


சரி வருமான வரி தாக்கல் செய்யும் போது இந்த தவறுகளைச் செய்யாமல் உஷாராக இருங்கள். இல்லை என்றால் வருமான வரித் துறையிடம் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வரும். ஒருவேளை கீழே சொல்லி இருக்கும் தவறுகளைச் செய்திருந்தீர்கள் என்றால் ஆடிட்டர்களைப் பார்த்து உங்கள் தவறுகளைச் சரி செய்து கொள்ளுங்கள்.


if you did this mistake you may get notice from income tax
1. படிவம் 26AS மற்றும் படிவம் 16-ல் குறிப்பிட்டிருக்கும் வருமானத்தை ஒழுங்காக கணக்கில் வரும் படி வருமான வரி தாக்கல் செய்வது. (இதில் நம்முடைய வருமான வரிச் சட்டங்களுக்கு உட்பட்ட கழிவுகளாக இருந்தால் கூட அவைகள் படிவம் 26AS மற்றும் படிவம் 16-ல் கொண்டு வர வேண்டியது நம்முடைய பொறுப்பு தான்)


62% பேருக்கு H1b visa மறுப்பு! புதிய வரலாற்று சாதனை படைத்த ட்ரம்ப் அரசு!

2. படிவம் 26AS-ல் இருக்கும் விவரங்கள் தவறாக இருந்தால் அவைகளை திருத்தம் செய்து வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்வது.


3. எல்லா வங்கிக் கணக்குகளையும் முறையாக வருமான வரித் துறையிடம் தெரிவிப்பது.

4. நம் சம்பளத்தில் பிடித்தம் செய்த பணம் அல்லது மற்ற வருமான வரிச் சட்டத்தின் படி செய்த பிடித்தங்களில் தவறான டான் எண் (Tan Number) குறிப்பிட்டிருந்தால், அதை கவனித்து திருத்திக் கொள்வது.

5. தவறான வருமான வரிப் படிவங்களை பூர்த்தி செய்துவிட்டால் அதை கண்டு பிடித்து, சரியான வருமான வரிப் படிவங்களில் வருமான வரிப் தாக்கல் செய்து கொள்வது.

6. பட்டியலிடப்படாத பங்குகளில் செய்திருக்கும் முதலீடுகளை முழுமையாக வருமான வரித் துறையினருக்கு முறையாக தெரியப்படுத்துவது.

7. வங்கி வட்டி வருமானங்களை எதார்த்தமாக கணக்கில் சேர்க்காமல் போவது அல்லது வங்கியில் நம் பெயரில் போட்டு வைத்திருக்கும் வைப்புத் தொகைக்கு கிடைக்கும் வட்டி வருமானத்தை கணக்கில் கொண்டு வராமல் விடுவது.

போன்ற விஷயங்களில் கவனமாக இருக்கவும். எனவே மேலே சொன்ன 7 விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி, வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் வருவதை தடுத்துக் கொள்ளுங்களேன்

உஷார்.. Income tax கட்டும் போது போலி வீட்டு பில் கொடுத்தால் இதுதான் நடக்கும்! ITR Filing 2019-20: வாடகை செலுத்தியதற்கான (Rent Receipts) ஆதாரங்களையும் சேகரித்து வருவதுண்டு.




உஷார்.. Income tax கட்டும் போது போலி வீட்டு பில் கொடுத்தால் இதுதான் நடக்கும்!
மாதச் சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் தனிநபர் வருமான வரி செலுத்துபவர்கள், வருமான வரி விலக்கு பெறுவதற்காக அடிப்படை விலக்கு தொகை போக வருமான வரி விதி 80சி பிரிவின்படி குறிப்பிட்ட தொகை வரையில் வரி விலக்கு பெறமுடியும் என்பது வரி செலுத்துவோர் அனைவரும் அறிந்ததே.

இவர்கள் சமர்ப்பிக்கும் பில் மற்றும் ஆவணங்கள் மற்றும் வருமான வரித்துறையில் அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் தானாகவே வரி ரீபண்ட்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே அனைத்து தொழில் நிறுவனங்களிலும் உள்ள எச் ஆர் டிபார்ட்மெண்ட் வருமான வரி வரம்பிற்குள் வரும் அனைத்து ஊழியர்களையும் தேடிப்பிடித்து அவர்களின் கழுத்தை பிடிக்காத குறையாக வருமான வரி விலக்குக்காக செலவு செய்த பில்களையும் (Reimbursement) முதலீடு (Investments) செய்ததற்கான ஆதாரங்களையும் வாடகை செலுத்தியதற்கான (Rent Receipts) ஆதாரங்களையும் சேகரித்து வருவதுண்டு.


Income Tax Return Filing 2019-20 income tax rules!
கடந்த நிதி ஆண்டுக்கான வரி செலுத்தும் நிகழ்வில் வேலைபார்க்கும் அனைவரும் மும்முரமாக ஈடுபட்டு பல ஆவணங்களை தயார் செய்து கொண்டிருப்பீர்கள் .அதற்காக போலியான ஆவணங்களை தாக்கல் செய்து வரியை குறைப்பது படித்தவர்களின் மத்தியில் தற்போது அதிகரித்து வருகின்றது .
அதற்கான காரணமாக அரசின் செயல்பாட்டையோ , அதிகபடியான வரி வசூலையோ , மற்றவர்கள் கட்டாமல் தானே ஏமாற்றுகிறார்கள் நான் ஏன் கட்டவேண்டும் என கூறியோ நியாயம் கற்பிக்க முயன்றால் செய்வது சரியானதாகிவிடாது.

மருத்துவச் செலவுகளுக்காக, முறைகால போக்குவரத்து சலுகை (Leave travel allowance) சலுகைக்கும் , வாடகை வீட்டில் இருப்பவர்கள் ரசீது பில் ஆகியவற்றை செலுத்தி வருமான வரி செலுத்துவதில் இருந்து விதிகளுக்கு உட்பட்டு விலக்கு பெறமுடியும்.

ஒவ்வொரு வருடமும், போலியான மதிப்பில் வீட்டு வாடகை ரசீது கொண்டு அதிகளவிலான வருமானத்திற்கு வரி விலக்கு பெறுவது மாத சம்பளக்காரர்களுக்கு ஒரு வழக்கமாக மாறியுள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

ஒரு லட்சத்திற்கும் குறைவாக வீட்டு வாடகையை எந்த ஆவண சான்றும் இல்லாமல் (பான் கார்டு ) காட்டலாம் என்பதால் அனைவரும் 8300 என வாடகை போடுவது வழக்கமான ஒன்றாக இருக்கின்றது .இன்னும் பலரோ 12000-15000 அளவிற்கு வீட்டு வாடகையை கொடுப்பதாக குறிப்பிடுவதோடு மட்டுமல்லாமல் போலியான பான் கார்டு விவரங்களையும் கொடுக்கின்றனர் .

ஒரே வீட்டிற்கு பலர் வாடகை கொடுப்பதாக கூறுவதும் நடக்கிறது.வாடகைக்கு குடியிருக்காத பலரும் கூட இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வரி குறைப்பில் ஈடுபடுகின்றனர் .மக்களின் முழுமையான வருமானத்திற்கு முறையாக வரி வசூலிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள வருமான வரித் துறை, தற்போது மக்கள் பயன்படுத்தி வரும் சட்டத்திற்கு எதிரானது வழிகளை அடைந்து வருகிறது.அதன் படி இனி, வருமான வரித்துறை நினைத்தால், ஒரு நபர் தான் குடியிருக்கும் வீட்டிற்கும், அளிக்கப்படும் வாடைக்கான முறையான ஆதாரங்களைக் கோரவும் முடிவுசெய்துள்ளது. இனிமேல் வருமான வரி தாக்கல் செய்யும்போது போலியான ஆவணங்களை சமர்பிக்கலாம் என நினைப்பவர்கள் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு செயல்படுவது முக்கியம்.

How a Tournament Works, Part 3 - Direct Eliminations - SWORDS FENCING STUDIO ...