Warning fake income tax email and sms
தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்
Income TAX என்ற பெயரில் மின்னஞ்சல்கள் அனுப்பி பெரும் மோசடி நடைபெறுவதாக வருமான வரித்துறையும் பல்வேறு மாநில காவல்துறைகளும் அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளன. வருமான வரி செலுத்துவோர் கவனத்துடன் இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையில் refund அனுப்புகிறோம் என்ற பெயரில், பொய்யான முகவரிகளில் இருந்து போலி மின்னஞ்சல்கள் வருமான வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படுகிறது. இதில், நமது வங்கி கணக்கு எண்ணைக் கூட சரியாக குறிப்பிட்டு நம்பும்படி அனுப்புவார்கள். இதைப் பார்த்ததும், ரீ பண்ட் கிடைக்கப்போகிறது என்ற ஆசையில், மின்னஞ்சலில் கேட்கப்படும் பல தகவல்களைப் பலர் பகிர்ந்துக் கொள்கிறார்கள்.
இந்த லிங்கை திறந்தவுடனேயே நமது தனிப்பட்ட தகவல்களை மோசடியாளர்கள் எடுத்துவிடுவார்கள் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக, தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, நம்பும்படி பேசி மேலும் பல தகவல்களைப் பெற்று, வங்கி்க் கணக்கிலிருந்து பணத்தை மோசடியாளர்கள் சுருட்டுகிறார்கள் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
வருமான வரித்துறையும், தொலைபேசியின் மூலமாக எந்தத் தகவல்களையும் ஒரு போதும் கேட்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது வருமான வரி செலுத்தும் சீசன் என்பதால், தற்போது இந்த வகை மோசடி பிரபலமாகி வருகிறது. எனவே, பொதுமக்களும், நமது நேயர்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி சத்தியம் தொலைக்காட்சி சார்பில் அன்பு வேண்டுகோள் வைக்கிறோம்
Income TAX என்ற பெயரில் மின்னஞ்சல்கள் அனுப்பி பெரும் மோசடி நடைபெறுவதாக வருமான வரித்துறையும் பல்வேறு மாநில காவல்துறைகளும் அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளன. வருமான வரி செலுத்துவோர் கவனத்துடன் இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையில் refund அனுப்புகிறோம் என்ற பெயரில், பொய்யான முகவரிகளில் இருந்து போலி மின்னஞ்சல்கள் வருமான வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படுகிறது. இதில், நமது வங்கி கணக்கு எண்ணைக் கூட சரியாக குறிப்பிட்டு நம்பும்படி அனுப்புவார்கள். இதைப் பார்த்ததும், ரீ பண்ட் கிடைக்கப்போகிறது என்ற ஆசையில், மின்னஞ்சலில் கேட்கப்படும் பல தகவல்களைப் பலர் பகிர்ந்துக் கொள்கிறார்கள்.
இந்த லிங்கை திறந்தவுடனேயே நமது தனிப்பட்ட தகவல்களை மோசடியாளர்கள் எடுத்துவிடுவார்கள் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக, தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, நம்பும்படி பேசி மேலும் பல தகவல்களைப் பெற்று, வங்கி்க் கணக்கிலிருந்து பணத்தை மோசடியாளர்கள் சுருட்டுகிறார்கள் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
வருமான வரித்துறையும், தொலைபேசியின் மூலமாக எந்தத் தகவல்களையும் ஒரு போதும் கேட்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது வருமான வரி செலுத்தும் சீசன் என்பதால், தற்போது இந்த வகை மோசடி பிரபலமாகி வருகிறது. எனவே, பொதுமக்களும், நமது நேயர்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி சத்தியம் தொலைக்காட்சி சார்பில் அன்பு வேண்டுகோள் வைக்கிறோம்
Comments
Post a Comment